இடந்தருவாயா மனசுக்குள்ளே!
கண்களில்
சிரிக்கின்றாய்
உதடுகளில்
மணக்கின்றாய்
பவ்ய முகம்காட்டி
மனதுக்குள்
இடம் பிடிக்கிறாய்!
உன் சின்னச்சிரிப்பிற்கு
என் சிந்தனைகளை
கொடுத்தேன்..
உன் உதடுச்சொல்லுக்கு
என் உலகையே
கொடுத்தேன்..
உன் இதயத்தில்
என் நினைவுகளுக்கும்
கொஞ்சம் இடந்தருவாயா?
Kavingar Sabapathi
ReplyDelete