அன்பே உன்னை பார்த்ததால்!
உச்சி வெயில்
உன்னை பார்த்ததால்
தென்றல் மாலையானது
நடுங்கும் குளிர்
உன்னை பார்த்ததால்
கதகதப்பான இளம்பகலானது
கொட்டும் மழை
உன்னை பார்த்ததால்
பனிவிழும் காலையானது
கோடை மழை
உன்னை பார்த்ததால்
மார்கழி வெய்யிலானது
என் அன்பே!
உன்னை பார்த்ததால்
என் இதயக்கல்
அழகு பூந்தோட்டமானது!
Neega kalakungaaaaa...
ReplyDeleteNeega kalakungaaaaa...
ReplyDelete