அற்புதம்! அற்புதம்!
உயர உயர
வளர்ந்தாலும்
தலைக்கனமில்லை
தழைத்து செழித்து
பெருத்தாலும்
தளர்ச்சியில்லை
குளிர்காற்றால்
மனதை குளிர்விக்கும்
குளிர்மழையும்
இதனால் உருவாகும்
இலை தழையால்
மண்ணும் செழிக்கும்
பறவைகளும் விலங்குகளும்
அண்டிப்பிழைக்கும்
ஒசோனையும் காக்கும்
உயிர்க்காற்றை பெருக்கும்!
காலங்கள் பலகடந்தாலும்
பயன்கள் சேர்க்கும்!
மரங்களே அற்புதம்!
மரங்களே அற்புதம்!
அற்புதம் 👌👍
ReplyDelete