Monday, 14 May 2018

தேவதையே! வா.. வா..



நீயும் நிலவும் ஒன்றுதான்
இருவரும் தூர இருந்தே
எழில்முகம் காட்டுவதல்!
நீயும் கடலும் ஒன்றுதான்
இருவரும் சுனாமியை
ஒளித்து வைத்துள்ளதால்!
நீயும் வானும் ஒன்றுதான்
இருவரும் நான் தொடமுடியாத
தூரத்தில் இருப்பதால்!
நீயும் தேவதையும் ஒன்றுதான்
இருவரும் கனவில் மட்டுமே
என்னோடு வருவதால்!
நீயும் மழையும் ஒன்றுதான்
இருவரும் எதிர்பாராமல்
அன்பைப் பொழிவதால்!

No comments:

Post a Comment