ஒரு நொடி,
உன் விழி
என் விழியோடு பேசும்!
அந்நாளின்
ஒவ்வொரு நொடியும்
என் மனம்
உன் மனதோடு பேசும்..
ஒரு சொல்லில்
உன் உதடுகளில்
நான் இருப்பேன்!
அந்நாளின்
ஒவ்வொரு சொல்லிலும்
என் செவியில்
நீ இருப்பாய்..
ஒரு அசைவில்
என் உடமைகளில்
உரசி செல்வாய்!
அந்நாளின்
ஒவ்வொரு அசைவுகளும்
என் இதயத்தில்
தடம் பதிக்கும்..
ஒரு சிரிப்பில்
என் உள்ளம்
கவர்ந்து செல்வாய்!
அந்நாளின்
ஒவ்வொரு சிரிப்பிலும்
நீயாகவே
நிறைந்திருப்பாய்..
உந்தன் உயிரை
நேசித்தேன்
எந்தன் உயிருக்குள்
உனை வைத்தேன்
எனை நீ ஏற்பாயோ..
என் அன்பு தேவதையே!

No comments:
Post a Comment