Sunday, 29 April 2018

உன்னோடு மட்டுமே!


முதன் முறை
பிடிக்கவில்லை என்றாய்!
இரண்டாம் முறை
முன்பே உன்னிடம்
சொல்லிவிட்டேனே என்றாய்!
மூன்றாம் முறை
எதுவும் சொல்லவுமில்லை!
என்னை கொல்லவுமில்லை!

உன் விழிப்பார்வைகளை
பார்த்தும் சாகிறேன்!
பார்க்காமலும் சாகிறேன்!
உன் இனிய பேச்சுகளை
கேட்டும் சாகிறேன்!
கேட்காமலும் சாகிறேன்!

உன் கனவுகளோடு
என் இரவுகள் விடியும்!
உன் நினைவுகளோடு
என் பகல்கள் உறையும்!

உனக்கான காத்திருப்பு
உயிர்கொல்லும்
சுகமாகிப்போனது எனக்கு!
உனக்கான பரிதவிப்பு
மனங்கொல்லும்
இரனமாகிப்போனது எனக்கு!

பித்தாகிக் கிடக்கின்றேன்!
பைத்தியமாய் அலைகின்றேன்!
உணர்வுக்குள் உனை வைத்தேன்!
உயிருக்குள் உனை தைத்தேன்!

வேண்டும் நீயே வேண்டும்!
உன்னோடு மட்டுமே
வாழ்வெனக்கு வேண்டும்!

என் அன்பே! என்னுயிரே!



எதனால் என்னை
பிடிக்கிறது என்றாய்?
என்னவோ..
பிடிக்கிறது உன்னை!
எதுவோ..
இருக்கிறது உன்னில்!

கன்னக் குழியழகில் 
விழுந்துவிட்டேனோ?
மஞ்சள் நிரத்தழகில்
மயங்கிவிட்டேனோ?
அதிராத பேச்சழகில்
அடங்கி விட்டேனோ?
ஆம்! ஆம்! ஆம்!
எல்லாமும் தான்!!

இருந்தாலும்..
ஆண் பெண் பாராமல்,
நட்போடு பழகுவதும்
யாரையும் புண்படுத்தாமல்,
அன்போடு எண்ணங்களை
வெளிப்படுத்துவதும்..

முகம் சுளிக்காமல்,
வேலைப்பளு ஏற்பதிலும்
துன்பத்தில் துவளாமல்,
அன்பாகப் பேசுவதும்..
எல்லோரிடத்திலும்,
அக்கறையோடு இருப்பதிலும்
இப்படி..
உனக்கான அடையாளங்கள்
என் மனதில் ஏராளம்!

என் அழகே! என்னவளே!
என் அன்பே! என்னுயிரே!
என் இதயம் நீயடி!
என் உயிரும் நீயடி!

பூக்களின் புன்னகை!

😤😤😤

பூக்கள் கற்றுக்கொண்டது
புன்னகைக்கும் அழகை
மழலைகளிடமிருந்து!

😤😤😤

பூப்போல சிரிப்பு!


பூப்போல் பூப்போல்
நீ சிரிக்கும்
அழகு பார்க்க
தேன்! தேன்!
தேன்! தேன்!
*-*-*-*-*
கோடி என்ன கோடி?
நீ தான் எனக்கு
கோடி! கோடி!
*-*-*-*-*
என் செல்லமே!
என் கண்மணி!
வா! வா!
என் முத்தே!
என் சொத்தே!
வா! வா!

Friday, 27 April 2018

அன்பே! உன் வாசம்...

சில வெள்ளிகிழமைகளில்
அலைபாயும்...
உன்கூந்தலின் புதிய வாசம்! 

அவசர நடைபயனங்களின்
இளைப்பாரலில்...
அரும்பிடும் துளிகளின் வாசம்! 

அந்தசில தினங்களில் மலரும் 
உந்தன் தணித்துவ...
உயிரின் வாசம்! 

திருவிழா காலங்களில் பளிசிடும் 
அழகிய நெகங்களின்...
வண்ணப்பூச்சு வாசம்! 

சிலஅற்புத தருணங்களில் புடவையோடு 
உம் பெண்மையின்...
இனிய வாசம்! 

எப்பொழுதும் என் மனதோடு
உன் வாசம்!!.. உன் வாசம்!!..
முப்பொழுதும் என் நெஞ்சோடு
உன் நேசம்!!,, உன் நேசம்!!..

அழகே!.. அழகே!..



தத்தத்தி நடை பயிலும்

தாமரைப் பாதம் அழகா?

காற்றில் அலைந்திடும் 

வாழைத் தண்டு கைகள் அழகா?

துளிர்க்கும் தளிர்போல

பட்டு மேனி அழகா?

கருவிழி அசைந்திடும்

துருதுரு பார்வை அழகா?

தேனாக இனிதேடும்

மழலைக் குரல் அழகா?

சொக்கிபோய் நிற்கின்றேன்

என் தங்கமே உன் அழகில்..!!

சொல்ல வார்த்தை இல்லை

என் செல்லமே உன் பேரழகு..!!






"ஐ லவ் யு" "ஐ லவ் யு" சங்கீதமே...!!


ஜல் ஜல் கொலுசொலி

கேட்டு விட்டேன்

அதோ அதோ

என்னவள்

பார்த்துவிட்டேன்!

இனி எங்கும்

சந்தோஷ சங்கீதம் தான்

பூலோகமே

பூத்து குலுங்கும்

பூந்தோட்டம் தான்

சின்ன உதடுகள்

சொல்லுவதேல்லாம்

"ஐ லவ் யு"

"ஐலவ் யு"

!சங்கீதமே!