Sunday, 29 April 2018

என் அன்பே! என்னுயிரே!



எதனால் என்னை
பிடிக்கிறது என்றாய்?
என்னவோ..
பிடிக்கிறது உன்னை!
எதுவோ..
இருக்கிறது உன்னில்!

கன்னக் குழியழகில் 
விழுந்துவிட்டேனோ?
மஞ்சள் நிரத்தழகில்
மயங்கிவிட்டேனோ?
அதிராத பேச்சழகில்
அடங்கி விட்டேனோ?
ஆம்! ஆம்! ஆம்!
எல்லாமும் தான்!!

இருந்தாலும்..
ஆண் பெண் பாராமல்,
நட்போடு பழகுவதும்
யாரையும் புண்படுத்தாமல்,
அன்போடு எண்ணங்களை
வெளிப்படுத்துவதும்..

முகம் சுளிக்காமல்,
வேலைப்பளு ஏற்பதிலும்
துன்பத்தில் துவளாமல்,
அன்பாகப் பேசுவதும்..
எல்லோரிடத்திலும்,
அக்கறையோடு இருப்பதிலும்
இப்படி..
உனக்கான அடையாளங்கள்
என் மனதில் ஏராளம்!

என் அழகே! என்னவளே!
என் அன்பே! என்னுயிரே!
என் இதயம் நீயடி!
என் உயிரும் நீயடி!

No comments:

Post a Comment