Friday, 27 April 2018

அழகே!.. அழகே!..



தத்தத்தி நடை பயிலும்

தாமரைப் பாதம் அழகா?

காற்றில் அலைந்திடும் 

வாழைத் தண்டு கைகள் அழகா?

துளிர்க்கும் தளிர்போல

பட்டு மேனி அழகா?

கருவிழி அசைந்திடும்

துருதுரு பார்வை அழகா?

தேனாக இனிதேடும்

மழலைக் குரல் அழகா?

சொக்கிபோய் நிற்கின்றேன்

என் தங்கமே உன் அழகில்..!!

சொல்ல வார்த்தை இல்லை

என் செல்லமே உன் பேரழகு..!!






No comments:

Post a Comment